Thursday, July 17, 2008

காதல்



காதல்


-----

கலைந்து கரைந்து போன காதல் நினைவுகளை பலைய பாடல்களின் என் நினைவுகளை மீட்டிப்பார்க்கின்றேன்.நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போதுதான் கண்கள் கசிந்து போனாலும் இசைகள் மீண்டும் வாழ வைக்கின்றன. எந்த மானிடப்பிறவியிலும் என்னை பொறுத்தவரை காதல் என்ற வார்த்தைகள் மலர இடம் இல்லை. இப்பிறவியில் காதல் தந்த வேடிக்கையும் உரிமை இல்லாத வார்த்தைகளும் மெய்யொன நம்பி நம்மை நான் இழந்தது போதும்.

என் தொலைந்த வசந்தம் மீண்டும் வராவிட்டாலும் எனக்கு இந்த இசைகள் போதும் .வாழ்ந்து மடிந்து போக.


உன்னை நான் சந்தித்த முதள் நாள். நீ..பாடிக்கொண்டு இருந்த போது என் செவிகள் இதமாகி என்னை ரசிக்க வைத்த பாடல் இது http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=32244


உன் நிலையை அறிய உன்னிடம் மெல்ல மெல்ல எழுந்து வந்தன என்கால். அப்போ இரவு 10.30 உன்னை நான் அழைப்பதற்குள் அடுத்தபாடல் உனது கரங்கள் தொட்டன அது இதுதான்"நான் ஒரு ராசி இல்லா ராஜா...."
http://www.raaga.com/playerV31/index.asp?pick=3310&mode=3&rand=0.9777356608007855&bhcp=1
என்னை அறியாமல் எனக்குள் ஒரு தேடல் சாதரனமாக இந்தப்பாடல்களை நாம் நினைத்துவிடுவாதா..?! அதற்குள் அயிரம் கேள்விகள் இருந்தாலும் நாம் தீர்த்துவைக்கூடிய கேள்விகளை தீர்த்து வைக்க ஓடிவந்தோன் உன் பாதங்களில் முதலாக. நான்.


1-முதல் காதல் மலர்ந்த போது நீ கூறியது ..அன்பே அமுதே அரும் கனியே..என்று கொஞ்சிய வார்த்தையில் மயங்கி உன்னிடம் என்னை விழ வைத்த பாடல் இது.









2-சரி இதுதான் இப்படி என்றா உன் அடுத்த பாடல் உன் ஆசைகளை என்னிடம் சொன்னாய் ..ஆசை கிழியே நீ..வா.என்றும் அரும் கலைவாணி ஆடும் ராணி பாடும் தேனி கொஞ்சிய மொழி கெஞ்சிய வார்த்தை அழகிய தமிழ் உச்சரிப்பு என்னை ஆக்கிரமித்து உன்னிடம் என்னை சரணடைய வைத்ததுஅப்பப்பா என்னை நானே கிள்ளி பார்த்தேன் நிஜம்தானா எனக்கு கிடைத்த அன்பு என்று.









3-என் பொறுமையை இழக்கச்செய்தாய் உன் அன்பை கண்டு என் கண்கள் கூட ஏக்கமாக உன்னை பார்வை இட்டன உன் அனபில் என்னை தாலாட்டினாய் உன் மடிதனில் இந்ததாலட்டில் என்னையே மறந்தேன் இத்தனைகாலம் என் கண்கள் உறக்கத்தை இழந்து இருந்தனஉன் இசைமடியில் இதவும் இந்தப்பாடலை நீ உன் மடிதனில் ஊஞ்சல் கட்டி என்னை தூங்கவைத்து போது என் குழந்தை மனம் செல்லமாக தூங்கியது.
இந்தப்பச்சைகிழிக்கு.






4-தூங்கிஎழுந்த போது என் கண்கள் உன்னை தேடியது பரிதாபமாக தேடியது மனது துடித்தன அப்போது உன்னிடம் இந்தக்கேள்வியை கேட்க வேண்டும் என்று துடித்தது எனக்கு மட்டும் எப்பவும் என்னோடு நீ..வேண்டும் என்று என்மனம் தவிக்க தொடங்கியது. அப்போது உன்னிடம் என் கேள்விகளை இப்படிதானே கேட்க முடியும்.









5-உனது பதில்கள் என்னை வாழவைக்க தொடங்கியது அதிகமாக உன் உதடுகள் உன் உள்ளத்தில் இருப்பதை சொன்னது நீ..உன்றும் உன் பூர்வஜென்ம பந்தம் உன்னையே நான் என் இதயத்தில் கடி புகுத்தி உள்ளேன் எனி எவருக்குமே இடம் இல்லை நீதான் என் மனைவி என்றும் இதில் உனக்கு சந்தேகமே வேண்டாம் என்று சொன்னது உன் உதடும் பாடலும்
நம் இரு உடலும் ஒரு உயிராகி அத்வைதமாகி போன நம் காதலை ரசித்து அப்படி பாடி பாடி மகிழ்தோம் இருவரும்.எப்படியா.. எங்கோ நீயும் இருந்து கனவு கட்டாய் நானும் அதே நிமிடம் கனவு கண்டேன் மறுநாள் உரையாடியபோதுதான் நான் கண்ட கனவும் நீ..கண்ட கனவும் ஒன்றானது. எது என்கின்றாய் இதுதான் .












6-கண்ட கனவில் நமது உள்ளம் எத்தனை ஆனந்தம் அடைந்து துள்ளி குதித்து மகிழ்தோம் இன்றைய நாள் போல் என்றம் நம் வசமாய் இருக்க வேண்டும் என்று வள்ளவன் வாசுகிபோல் நாம் வாழ்வோம் என்று கை கோர்த்து பாடிய பாடல் இது.









7-இருந்தும் மனது ஒரு சோகமாய் இருந்தது இருவரும் சேராமலே நினைவுகளால் இசையால் மட்டும் இப்படி சந்தோசமாய் இருக்கின்றோம் சேரும் காலம் வரமா..? என்று காலத்தை தினம் தினம் கேட்டுக்கொள்வேன் என்னை பிரிந்து விடாதே என்று நான் கேட்ட போது நீ..எத்தனை ஆறுதல் சொன்னாய் எனக்கு. ஒவ்வொரு சொற்களில் உன்னிடம் என்னை கனிய வைத்தாய்.நீ சொன்னாலும் காதல் பிரிந்தால் வேதனைதானே..?பயத்தில் நான் இப்படி பாடினேன் உன் காலடியில்.












8-பாடி பாடி வானம் முழுதும் தேவதை போல் அங்கும் இங்கும்மாய் வருவாயா? வந்து என்னை கனிவான மொழியால் பேசி என்னை அழைத்தசெல்வாயா..? என்று அழைந்து திரிகின்றேன் புவி மீது .நிறைவேறுமா..?என்று.









9-இருந்தும் நம்பிக்கையோடு காத்திருக்கேன் வருவாய் என்று வந்து உன் கரங்களால் என்னை தாங்குவாய் என்று. உனது வார்த்தை தான் என்னை வாழவைக்கும் பூவுக்கு நறுமணம் தான் அழகை கொடுப்பது எனக்கு நீ..தான் நிம்மதி என்ற அழகை கொடுப்பது என்னை ஏமாற்றுவது என்ற என்னத்தை விட்டுவிடு.









10-நான் சொல்வதை கூட காதில் விழுத்தாமல் என்னை கள்ளி என்று குறும்புசெய்யாதே.. கொஞ்சி பேசினால் போதுமா..? காதல் உள்ளம் கொண்ட நீயும் கள்ளன்தான்.









11-இசையில் நானும் நீயும் உயிர் கலந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் இப்படி பாடிக்கொண்டு இருந்தால் போதுமா..? என்னை ரசித்தது போதும் என் உணர்வகளை புரிந்து கொள் பாடுவதை நிறுத்து என்றால் கேட்காமல் இப்படி பாடுகின்றாயே என்னை என் வார்த்தைகளை புரிந்து கொள்ளடா.









12-நான் கேட்ட போதுதான் உன் உள்ளத்தை அறிந்தேன் உன் என்னத்தை அறிந்தேன் உனக்குள்ளம் இத்தனை ஆசைகள் உண்டா என்று. உன் செல்ல குரலில் என்னை என்னை குட்டி என்ற அழைத்தாய்.இப்படி.









13-என்னை குட்டி என அழைத்த போது நான் எனக்கு மட்டும் தான் என் செல்லம் என அழைத்தேன்.அப்போதுதான் என்னை அன்பாக பார்த்துக்கொள்ள ஒரு உறவு வந்து விட்டது என சந்தோசத்தில் மிதந்தேன்மனதில் பொன் ஊஞ்சலை கட்டி ஆடினேன்.






14-இது பொய் ஊஞ்சல் என்று காலம் கடந்துதான் கண்டேன். என் உணர்வுகள் என்காதல் என் ஆசைகள் எல்லாம் கட்டிய ஊஞ்சல் கயிறு அறுந்து போதுதான் என் இதயம் தூளாகிப்போனது.உன்னிடம் நான் கேள்வி கேட்டாலும் பதில் கிடைக்காது என்று தெரிந்தும் இறுதியாக கேட்கின்றேன்.









15-அனால் அவன் மனதில் அவள் மட்டுமே அவள் வேறு யாரும் இல்லை அவன் மனவி மட்டுமே..என்பதை காலம் கடந்துதான் அவள்கேள்விக்கு விடைகிடைத்தது. பொய்யான பிறேமையயை கண்டு ஒடிந்து ஓரமாய் அவள் மறைந்து கொண்டாள் அவன் மனதில் என்றும் இந்தப்பாடலில் வரும் இவள் தான் வாழ்கின்றாள் என்று ஒவ்வொரு நிகழ்வுகளிலும் புரிந்து கொண்டாள் குழந்தை மனம் கொண்ட இவள் எத்தனைகாலம்தான் ஏமாறுவாள்.









16-அவன் சந்தோசங்களுக்காகஎல்லாவற்றையும் தியாகம் செய்து கொடுத்துவிட்டு ஓரமாய் ஒதுங்கி வாழ்கின்றாள் ஒவ்வொரு நினைவுகளும் ஒவ்வொரு ஏக்கங்களும் எல்லா உணர்வுகளையும் ஆசையில் கட்டிய அத்தனை கலந்து உரையாடிய வசந்தங்களையும் சொல்லியும் எனி எந்த விடையும் கிடைக்கபோவதில்லை என்று தெரிந்து விடை பெற்று துங்கிவிட்டாள்.



http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29977
அன்று நான் மட்டமே உன்னை சுற்றி வர என்னை நேசித்தாய் இப்போ எல்லோரும் உன்னை சுற்றி இருப்பதால்என்னை மறந்து விட்டாய் மதிக்க தவறி விட்டாய் காத்திருக்க தவறி விட்டாய் காவியத்தில் எழுதும் நேரம்காதலையே மறந்துவிட்டாய். வாழ்க வளமுடன் .
காதல் காதல் இருவரும் உணவுகளை உரிமைகளை விட்டுக்கொடுக்காத காதலாய் காதலுக்காக எதையும் செய்ய துணிவு இருந்தாள் மட்டுமே காதல் செய்யங்கள் தயவு செய்து.
அன்புடன்.ராகினி.
--------------------------
உங்கள் காதல் நிறை வேறி விட்டதா..? அப்போ இதை கேளுங்கள்.
http://www.raaga.com/playerV31/index.asp?pick=40031&mode=3&rand=0.31549816906303174&bhcp=1